வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை சுல்தான்பேட்டை தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (45). இவருக்கு சுல்தான்பேட்டை அடுத்த சின்னவதம்பச்சேரி பகுதியில் தென்னை தோப்பு உள்ளது. மேலும் அவரது தந்தை ஆறுமுக கவுண்டர் (93) என்பவர் மட்டும் அங்கே உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பரமேஸ்வரி தனது தந்தையை பார்க்க நேற்று மதியம் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது பார்த்து விட்டு தோட்டத்திற்கு சென்ற போது தோப்பின் ஒரு பகுதியில் தென்னை மட்டை, ஓலைகளால் எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45-50 மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதையடுத்து, அவர் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இறந்தவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதையடுத்து உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் முழுவதும் எரிந்துள்ளதால் அடையாளம் கண்டறிய முடியாமல் இருந்த நிலையில் வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (45). இவருக்கு சுல்தான்பேட்டை அடுத்த சின்னவதம்பச்சேரி பகுதியில் தென்னை தோப்பு உள்ளது. மேலும் அவரது தந்தை ஆறுமுக கவுண்டர் (93) என்பவர் மட்டும் அங்கே உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பரமேஸ்வரி தனது தந்தையை பார்க்க நேற்று மதியம் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது பார்த்து விட்டு தோட்டத்திற்கு சென்ற போது தோப்பின் ஒரு பகுதியில் தென்னை மட்டை, ஓலைகளால் எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45-50 மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதையடுத்து, அவர் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இறந்தவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதையடுத்து உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் முழுவதும் எரிந்துள்ளதால் அடையாளம் கண்டறிய முடியாமல் இருந்த நிலையில் வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.