கோவை சுல்தான்பேட்டை தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை…!

வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (45). இவருக்கு சுல்தான்பேட்டை அடுத்த சின்னவதம்பச்சேரி பகுதியில் தென்னை தோப்பு உள்ளது. மேலும் அவரது தந்தை ஆறுமுக கவுண்டர் (93) என்பவர் மட்டும் அங்கே உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பரமேஸ்வரி தனது தந்தையை பார்க்க நேற்று மதியம் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.



அப்போது பார்த்து விட்டு தோட்டத்திற்கு சென்ற போது தோப்பின் ஒரு பகுதியில் தென்னை மட்டை, ஓலைகளால் எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45-50 மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து, அவர் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இறந்தவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதையடுத்து உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் முழுவதும் எரிந்துள்ளதால் அடையாளம் கண்டறிய முடியாமல் இருந்த நிலையில் வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது சடலமாக மீட்கப்பட்டவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...