யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் இந்தி மொழியில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் அக்கோவில் பகுதியில் வந்த வடமாநில நபர் ஒருவர் கோவிலை நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே சென்று கோவிலின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் எல்லை ரோந்து பணி காவலர்கள் அந்த வடமாநில நபரிடம் விசாரணை நடத்தினர்.

யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் இந்தி மொழியில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் அக்கோவில் பகுதியில் வந்த வடமாநில நபர் ஒருவர் கோவிலை நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே சென்று கோவிலின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் எல்லை ரோந்து பணி காவலர்கள் அந்த வடமாநில நபரிடம் விசாரணை நடத்தினர்.
யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் இந்தி மொழியில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.