கோவை குறிச்சியில் ரூ.6-கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு…!

கோவை குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொங்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30-சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை குறிச்சியில் ரூ.6-கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொன்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து அங்கு போத்தனூர் போலீசார் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள் வருவாய் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.



இதற்காக அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர் பின்னர் கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலின் பரம்பரை அறங்காவலர் இடம் ஒப்படைக்கப்பட்டது.



மேலும் 30 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...