கோவை குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொங்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30-சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை: கோவை குறிச்சியில் ரூ.6-கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொன்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதையடுத்து அங்கு போத்தனூர் போலீசார் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள் வருவாய் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதற்காக அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர் பின்னர் கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலின் பரம்பரை அறங்காவலர் இடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 30 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள கற்பக விநாயகர் மற்றும் பொன்காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதையடுத்து அங்கு போத்தனூர் போலீசார் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள் வருவாய் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதற்காக அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர் பின்னர் கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலின் பரம்பரை அறங்காவலர் இடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 30 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.