வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்த மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரையில் ஐடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவைப்புதூர் அருகே உள்ள திருவிக நகரை சேர்ந்த கோபிநாத்(27). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையிலிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், தங்க நாணயம் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கோபிநாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து கோபிநாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கோவைப்புதூர் அருகே உள்ள திருவிக நகரை சேர்ந்த கோபிநாத்(27). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையிலிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், தங்க நாணயம் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கோபிநாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து கோபிநாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.