அம்பேத்கர் மற்றும் கருணாநிதி பிறந்தநாள்: பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டு.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 19 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் கோவை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.


கோவை: அம்பேத்கர் மற்றும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையில் மானிய கோரிக்கை அடிப்படையில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 19 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் கோவை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.



இதில், 11 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்ற நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதன்படி, பூ.சா.கோ சர்வஜனா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் முதல் பரிசையும், கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஆஷாவி காசினி இரண்டாம் பரிசையும், பூ.சா.கோ கிருஷ்னம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இனியவள் மூன்றாம் பரிசினை பெற்றனர்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசினை பொன்னாக்கானி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி திரிஷலா, வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி காயத்திரி ஆகியோர் பெற்றனர்.

அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், அரசு சட்டக் கல்லூரி மாணவி சுமித்ரா முதல் பரிசையும், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் மாணவி ஆர்த்தி இரண்டாம் பரிசினையும், ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் இராபின் ஜோஸ்வா மூன்றாம் பரிசை பெற்றனர்.



கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சர்மிளா முதல் பரிசையும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் தீபக் இரண்டாம் பரிசையும், நிர்மலா மகளிர் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு (கணிதம்) பயிலும் மாணவி பிரகதி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 5000 ரூபாய், இரண்டாம் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 2000 ரூபாய் மற்றும் அரசு பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு பரிசு 2000 ரூபாய் காசோலையினையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...