நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20-லட்சத்து 72-ஆயிரத்து 229-கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.20.72லட்சம் வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். கோயிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, பேரூர் உதவி ஆணையர் விமலா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20-லட்சத்து 72-ஆயிரத்து 229-இருந்துள்ளது என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். கோயிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, பேரூர் உதவி ஆணையர் விமலா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20-லட்சத்து 72-ஆயிரத்து 229-இருந்துள்ளது என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.