கோவை மாநகராட்சி வார்டு எண்‌.65-ல்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ குடிநீர்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும்‌ பணிக்கு பூமி பூஜை..!

மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.65க்குட்பட்ட சிவராம்‌ நகரில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ குடிநீர்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்‌.



கோவை: கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 37க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை TNSUDP திட்டத்தின்கீழ்‌ ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.96 கிலோ மீட்டர்‌ நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்‌ தார்‌ சாலை பணியின்‌ தரத்தை நேரில்‌ ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.65க்குட்பட்ட சிவராம்‌ நகரில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ குடிநீர்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இன்று (09.06.2022) பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 37க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்‌ தார்‌ சாலை பணியின்‌ தரத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னா்‌ ஆணையாளர்‌ தெரிவித்ததாவது, “தற்போது 2.300 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.



மகேஸ்வரி நகர் முதல்‌ விளாங்குறிச்சி வரையில்‌ 2.9 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 27X7 குடிநீர்‌ திட்டம்‌ மற்றும்‌ இந்தியன்‌ ஆயில்‌ கார்ப்பரேசன்‌ மூலம்‌ கேஸ்‌ பைப்‌ லைன்‌ அமைக்கும்‌ பணியினை ஒருவார காலத்திற்குள்‌ முடிக்கவும்‌, பணிகளை துரிதபடுத்தி வெகு விரைவாக தார்சாலை அமைத்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்‌. தார்‌ சாலை அமைக்கும்‌ பணியினை தரமாகவும்‌ விரைவாகவும்‌ செய்து முடித்திடச் சம்பந்தப்பட்ட பொறியாளாகளுக்கு உத்தரவிட்டார்‌.



இந்நிகழ்வின்போது, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்கும்‌ இளஞ்செல்விகார்த்திக்‌, பணிகள்‌ குழுத்தலைவர்‌ சாந்திமுருகன்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ சங்கர்‌, மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர்‌ ராஜேஸ்வரி மேகநாதன்‌ உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி பொறியாளர்‌ ரமேஷ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...