கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில் அங்கு வந்த கோவை சரக DIG-முத்துசாமி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.
கோவை: கோவை சரக DIG-முத்துசாமி காரில் வரும் பொழுது போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கியது பின்னர் போக்குவரத்தை சீர் செய்ய சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு தினமும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அங்கு வழக்கமாக இருக்கும் போக்குவரத்து காவலர் வேறு பணிக்குச் சென்ற நிலையில், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற கோவை சரக DIG-முத்துசாமி ஜி.என் மில்ஸ் அருகே வந்த போது தனது வாகனத்தை நிறுத்தி அங்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.
அவருடன் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உடன் இரு புற சாலைகளிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த வாகனங்கள் நகர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.