கோவை வேலந்தாவளம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி பறிமுதல்!

கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கோவை – கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் கேரளா லாட்டரி இருந்தது தெரியவந்தது, மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் டீக்கடை நடத்தி வந்ததும், கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக எல்லைகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதே போல் வேலந்தாவளம் – பிச்சனூர் சாலையில் ரோந்து சென்ற போலீசார் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் லாட்டரி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர் சூலூரை சேர்ந்த ரவி (56) என்பதும், வழக்கமாக கேரளாவில் லாட்டரிகளை வாங்கி அதை மாவட்ட எல்லை மற்றும் சூலூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...