கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கோவை – கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் கேரளா லாட்டரி இருந்தது தெரியவந்தது, மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் டீக்கடை நடத்தி வந்ததும், கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக எல்லைகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதே போல் வேலந்தாவளம் – பிச்சனூர் சாலையில் ரோந்து சென்ற போலீசார் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் லாட்டரி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர் சூலூரை சேர்ந்த ரவி (56) என்பதும், வழக்கமாக கேரளாவில் லாட்டரிகளை வாங்கி அதை மாவட்ட எல்லை மற்றும் சூலூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை – கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் கேரளா லாட்டரி இருந்தது தெரியவந்தது, மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் டீக்கடை நடத்தி வந்ததும், கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக எல்லைகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதே போல் வேலந்தாவளம் – பிச்சனூர் சாலையில் ரோந்து சென்ற போலீசார் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் லாட்டரி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர் சூலூரை சேர்ந்த ரவி (56) என்பதும், வழக்கமாக கேரளாவில் லாட்டரிகளை வாங்கி அதை மாவட்ட எல்லை மற்றும் சூலூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.