கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் பொதுவழி ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

பொதுவழியில் கட்டப்பட்ட, ஆட்டு கொட்டகை மற்றும் கான்கிரிட் கழிப்பறைகளை, மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையில், மதுக்கரை வட்டாச்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.



கோவை: கோவை திருமலையாம்பாளையம் ரொட்டிகவுண்டனூர், அர்ஜூனா காலனியில் பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில், லூர்துமேரி என்பவர் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன் சிறிய வீடு ஒன்றை கட்டி வசித்து வந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டிற்குச் செல்லும் பொது வழியை மறித்து, அதே பகுதியை சேர்ந்த ராஜம்மாள் மற்றும் ரத்தினா ஆகியோர் ஆட்டுக்கொட்டகை மற்றும் கான்கிரிட் கழிவறைகளை கட்டி பொதுவழியை ஆக்கிரமித்து வந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிய நிலையில், தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இதையடுத்து தூர்லுமேரி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.



இதையடுத்து, மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன், இன்று மதுக்கரை வட்டாச்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.



மேலும், 5 நாட்களுக்கு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...