மாணவர்களுக்கு தங்கள் மையத்துறையிலேயே வேலைவாய்ப்பு தரும் விதமாக குமரகுரு கல்லூரிக்கும் பி3 நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்


கோவையை சேர்ந்த குமரகுரு கல்லூரிக்கும் ஜெர்மன் நாட்டை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் பி3 நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 



மாணவர்களுக்கு தங்களின் மையத் துறையிலேயே வேலைவாய்ப்பு அமைத்து தருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். 

பி3 நிறுவனத்தின் பயிற்சி பிரிவான பி3ஏ-உம், குமரகுரு கல்லூரியும் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. 

இப்பயிற்சியில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு பி3 நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

குமரகுரு நிறுவனத்தின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களுக்கும், பி3 நிறுவனத்தின் துணைத் தலைவர் நவ்தீப் கிரண் புராணிக் அவர்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கு வடிவமைப்பு, ஆராய்தல், மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...