கோவையில் வார்டு எண்‌.99 மற்றும்‌ 100-க்குட்பட்ட பகுதிகளில்‌ 3-நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக்‌ குழாயில்‌ இணைப்பு ஏற்படுத்தும்‌ பொருட்டு 09.06.2022 முதல்‌ 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை:கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 100-க்குட்பட்ட பகுதிகளில்‌ புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக்‌ குழாயில்‌ இணைப்பு ஏற்படுத்தும்‌ பொருட்டு 09.06.2022 முதல்‌ 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்-99 மற்றும்‌ 100-க்குட்பட்ட பகுதிகளுக்கு பில்லூர்‌ 1 திட்டத்தின்கீழ்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்திடம்‌ இருந்து குடிநீர்‌ பெறப்பட்டு விநியோகம்‌ செய்யப்படுகிறது.

மேற்கண்ட குடிநீர் கொண்டு வரும்‌ பிரதான குழாய்‌ சிங்காநல்லூர்‌, வெள்ளலூர்‌ சாலை வழியாக

மேட்டூர்‌ கீழ்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி வரை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சாலையில்‌ நொய்யல்‌ ஆற்றின்‌ குறுக்கே உள்ள தரைமட்ட பாலம்‌ புதுப்பித்து கட்டும்‌ பணி துவங்கப்பட்டுள்ளது.

இப்பணியின்‌ காரணமாக இப்பாலத்தின்‌ மீது உள்ள குடிநீர்‌ குழாயை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால்‌, சாலையின்‌ இருபுறமும்‌ புதிதாக விநியோகக்‌ குழாய்‌ அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள விநியோகக்‌ குழாயில்‌ இணைப்பு ஏற்படுத்தும்‌ பொருட்டு 09.06.2022 முதல்‌ 11.06.2022 தேதி வரை குடிநீர்‌ நிறுத்தம்‌ செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, வார்டு எண்‌.99 மற்றும்‌ 100க்குட்பட்ட பகுதிகளுக்கு 09.06.2022 முதல்‌ 11.06.2022 தேதி வரை மூன்று தினங்களுக்குக் குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...