சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை தங்கம்(61). இவரது மகன் கார்த்திக் கண்ணன்(33), சென்னையில் ஐடி ஊழியராக இருந்தார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
குடிப்பழக்கம் காரணமாக அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கார்த்திக் கண்ணன் மற்றும் அவரது தந்தை சர்க்கரை தங்கம் குடும்பத்துடன் வஞ்சியாபுரம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வந்த கார்த்திக் கண்ணன் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சர்க்கரை தங்கம் கார்த்திக் கண்ணன் கழுத்தில் அணிந்திருந்த துண்டை இறுக்கி இழுத்துச் சென்று கட்டிலில் தள்ளியதாகத் தெரிகிறது.
அப்போது, அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த கார்த்திக் கண்ணனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற கோட்டூர் போலீசார், உயிரிழந்த கார்த்திக் கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சர்க்கரை தங்கதைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை தங்கம்(61). இவரது மகன் கார்த்திக் கண்ணன்(33), சென்னையில் ஐடி ஊழியராக இருந்தார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
குடிப்பழக்கம் காரணமாக அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கார்த்திக் கண்ணன் மற்றும் அவரது தந்தை சர்க்கரை தங்கம் குடும்பத்துடன் வஞ்சியாபுரம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வந்த கார்த்திக் கண்ணன் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சர்க்கரை தங்கம் கார்த்திக் கண்ணன் கழுத்தில் அணிந்திருந்த துண்டை இறுக்கி இழுத்துச் சென்று கட்டிலில் தள்ளியதாகத் தெரிகிறது.
அப்போது, அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த கார்த்திக் கண்ணனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற கோட்டூர் போலீசார், உயிரிழந்த கார்த்திக் கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சர்க்கரை தங்கதைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.