கோவையில் எல்லா கடைகளிலும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு: மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தல்!

கோவையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நெகிழி பைகளை தவிர்த்துவிட்டு மீண்டும் மஞ்சப்பைகள் பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நெகிழி பைகளை தவிர்த்துவிட்டு மீண்டும் மஞ்சப்பைகள் பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ தமிழ்நாடு முதலமைச்சா்‌ மீண்டும்‌ மஞ்சப்பை இயக்கம்‌ தொடங்கப்பட்ட நாளில்‌ இருந்து மிகச்சிறப்பாக நெகிழி இல்லாத கோவையை உருவாக்கிட மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌, மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில்‌ பழைய காலத்தில்‌ பயன்படுத்திய மஞ்சப்பை பழக்கத்தினை கொண்டுவர வேண்டும்‌ என்பதற்காக முதல்வர் தொடங்கிய திட்டத்தை மொத்த மாநகராட்சி பகுதிகளில்‌ இருக்க கூடிய அனைத்து கடைகளுக்கும்‌ சென்று சேரும்‌ வண்ணம்‌, அனைத்து கடைகளுக்கும்‌ விழிப்புணர்வு பிரச்சாரங்கள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்கள்‌ மூலம்‌ நெகிழி பைகளை தவர்த்து விட்டு மீண்டும்‌ மஞ்சப்பைகளை பயன்படுத்திட தெரிவித்துள்ளோம்‌.

அதேபோல்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பு மிக முக்கியமானது. பொதுமக்கள்‌ எங்கு சென்றாலும்‌ கைகளில்‌ ஒரு மஞ்சப்பை எடுத்து சென்று, கடைகளில்‌ பொருட்கள்‌ வாங்குவது அல்லது பிற உபயோகத்திற்கு பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு நமது மாநகராட்சியின்‌ சார்பில்‌ தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள்‌ மூலமாகவும்‌, துண்டு பிரசுரங்கள்‌ மூலமாகவும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திக்‌ கொண்டு வருகிறோம்‌. மேலும்‌, கடைகளுக்கு திடீர்‌ ஆய்விற்கு செல்லும்‌ அனைத்து அலுவலர்களும்‌ கடைகளில்‌ பிளாஸ்டிக்‌ பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அவ்வாறு பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால்‌ அவற்றை உடனடியாக பறிமுதல்‌ செய்து, சம்மந்தப்பட்ட கடையின்‌ உரிமையாளருக்கு அபராதம்‌ விதிக்கப்பட வேண்டும்‌.

மேலும்‌, பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்‌ என்னவென்றால்‌ முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ மூலமாக நெகிழி இல்லாத கோவையை உருவாக்கும்‌ நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ தங்களுடைய முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌. அதேபோல்‌ வியாபாரிகள்‌ நெகிழி பொருட்கள்‌ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்‌. தற்போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என வீடுகளிலேயே பொதுமக்கள்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து கொடுக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ பிளாஸ்டிக்‌ குப்பைகளை தனியே பிரித்து, அவற்றை இயந்திரங்களின்‌ மூலம்‌ சிறு துகள்களாக மாற்றப்பட்டு சிமெண்ட்‌ தயாரிக்கும்‌ நிறுவனங்களுக்கும்‌, தார்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கும்‌ வழங்கப்பட்டு வருகின்றது” என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...