கோவை வால்பாறையில் 300 கிராம் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

கோவை வால்பாறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை வால்பாறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சில தினங்களாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை டவுன் பகுதியில் கக்கன் காலனி, மார்க்கெட், பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சுற்றி திரிவதை உறுதி செய்து, அவரை அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் அருண்குமார் என்பதும் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை செய்து பரிசோதனை செய்து பார்த்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பார்த்தாலோ யாரேனும் சந்தேகத்துடன் சுற்றி திரிந்தால் வால்பாறை காவல் நிலையம் 222201 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...