கோவையில் வியாசர் ஆன்மீக மையம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்..!

கோவை மாநகராட்சி 22-வது வார்டு மற்றும் 5வது வார்டு பகுதி தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வியாசர் ஆன்மீக மையம் சார்பில், தள்ளு வண்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: வியாசர் ஆன்மீக மையம் சார்பில் 22-வது வார்டு மற்றும் 5-வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

22வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வியாசர் ஆன்மீக மையத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பையா (எ) R. கிருஷ்ணன் மற்றும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு மற்றும் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வியாசர் ஆன்மீக மையத்தின் தலைவர் கோபால்சாமி தள்ளு வண்டிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

7வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா மணியன், திராவிட முன்னேற்ற கழகத்தின் 22வது வட்டச் செயலாளர் செல்வராஜ், 9வது வார்டு வட்டச்செயலாளர் மயில்சாமி உட்பட திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.



சமுதாய மக்களின் நலனுக்காகவும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையிலும் தள்ளுவண்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வியாசர் ஆன்மீக மையம் தலைவர் கோபால்சாமி அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர்கள் கோவை பாபு மற்றும் நவீன் குமார் ஆகியோர் வார்டு பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...