தடாகம் சாலை வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர் பாளையம் பகுதியில் 7-கிலோமீட்டர் தொலைவிற்கு, சாலைகள் சுமார் 5-ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக இருந்த நிலையில், சீர் செய்யும் பணி நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.
கோவை: தடாகம் சாலை அகலப்படுத்தி சீர் செய்யும் பணியினை விரைந்து துவங்கி முடிக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய சாலைகள், பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை பழுது நீக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
அதன் பயனாக, கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலிரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113 கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
113-கோடி ரூபாய் மதிப்பில், 32-கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனிடையே, கோவை தடாகம் சாலை வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர்பாளையம் பகுதியில் 7-கிலோமீட்டர் தொலைவிற்கு, சாலைகள் சுமார் 5-ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக இருந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்திலும் மழைக்காலங்களிலும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அந்த சாலையை அகலப்படுத்தி சீர் செய்யும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி இரு தினங்களுக்கு முன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய சாலைகள், பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை பழுது நீக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
அதன் பயனாக, கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலிரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113 கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
113-கோடி ரூபாய் மதிப்பில், 32-கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனிடையே, கோவை தடாகம் சாலை வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர்பாளையம் பகுதியில் 7-கிலோமீட்டர் தொலைவிற்கு, சாலைகள் சுமார் 5-ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக இருந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்திலும் மழைக்காலங்களிலும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அந்த சாலையை அகலப்படுத்தி சீர் செய்யும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி இரு தினங்களுக்கு முன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.