கோவை பொள்ளாச்சியில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு வசதி இல்லை என்றால் நடவடிக்கை..!

பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் நோட்டீஸ் அனுப்பியவுடன் 7 தினங்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.


கோவை: பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு வசதி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 13-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 60க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞானதேவ்-ராவ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று, வாகன காப்பீடு, உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால வழி, வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்களை காலை, மாலை, இரு வேலைகளிலும் ஆய்வு செய்து மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்கிறார்களா? என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஜிபிஎஸ் கருவி மூலம் பெற்றோர்களுக்கு இணைப்பு வழங்கி சரியான நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதையும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்புவதையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் நோட்டீஸ் அனுப்பியவுடன் 7 தினங்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...