பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் அணைகளில் ஒன்றான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆழியாறு அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை இந்த திட்டத்தை கைவிட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவிவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயிகளை வஞ்சிக்காதே, சோலை வனத்தை பாலைவனமாக மாற்றதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, பாசனத்திற்காக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், எனவே இந்த திட்டத்தை கைவிட தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் அணைகளில் ஒன்றான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆழியாறு அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை இந்த திட்டத்தை கைவிட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவிவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயிகளை வஞ்சிக்காதே, சோலை வனத்தை பாலைவனமாக மாற்றதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, பாசனத்திற்காக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், எனவே இந்த திட்டத்தை கைவிட தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.