கோவை சூலூர் நெடுஞ்சாலையில் கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு..!

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை சூலூர் நெடுஞ்சாலையில் கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.

சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை சூலூர் அருகேநேற்று இரவு சுமார் 7 மணியளவில், கேரளாவிலிருந்து கோவையை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு சாலையை கடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த சூலூர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



உயிரிழந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாததால், சூலூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...