கோவை சூலூர் நெடுஞ்சாலையில் கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு..!

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை சூலூர் நெடுஞ்சாலையில் கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.

சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை சூலூர் அருகேநேற்று இரவு சுமார் 7 மணியளவில், கேரளாவிலிருந்து கோவையை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு சாலையை கடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த சூலூர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



உயிரிழந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாததால், சூலூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...