மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மேற்கு மண்டலம் வார்டு எண்.45-க்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தூய்மைப்பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
இதேபோல், மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45, மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
இதேபோல், மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.45க்குட்பட்ட இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்.மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
இதேபோல், மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹோமலதா, 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.