கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை: கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை பேரூர் அடுத்த மாதம்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தீபன் குமார். இவரது மனைவி பூங்கொடி (29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டின் அருகில் தையல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த நாய் குறைத்ததாக தெரிகிறது. அப்போது பூங்கொடி வெளியே வந்து பார்த்தபோது அவர் வீட்டில் வளர்த்து வரும் இரண்டு சேவல்களை மூன்று நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. அப்போது பூங்கொடி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்த தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருது (29) கோவையில் தங்கி ஓட்டுநர் வேலை செய்தவர் வருவதும், மற்றொருவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் மற்றொரு நபருடன் சேர்ந்து சேவலை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை பேரூர் அடுத்த மாதம்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தீபன் குமார். இவரது மனைவி பூங்கொடி (29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டின் அருகில் தையல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த நாய் குறைத்ததாக தெரிகிறது. அப்போது பூங்கொடி வெளியே வந்து பார்த்தபோது அவர் வீட்டில் வளர்த்து வரும் இரண்டு சேவல்களை மூன்று நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. அப்போது பூங்கொடி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்த தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருது (29) கோவையில் தங்கி ஓட்டுநர் வேலை செய்தவர் வருவதும், மற்றொருவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் மற்றொரு நபருடன் சேர்ந்து சேவலை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.