கோவையில் சேவல் திருட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.


கோவை: கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை பேரூர் அடுத்த மாதம்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தீபன் குமார். இவரது மனைவி பூங்கொடி (29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டின் அருகில் தையல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த நாய் குறைத்ததாக தெரிகிறது. அப்போது பூங்கொடி வெளியே வந்து பார்த்தபோது அவர் வீட்டில் வளர்த்து வரும் இரண்டு சேவல்களை மூன்று நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. அப்போது பூங்கொடி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்த தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருது (29) கோவையில் தங்கி ஓட்டுநர் வேலை செய்தவர் வருவதும், மற்றொருவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் மற்றொரு நபருடன் சேர்ந்து சேவலை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...