கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை: கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில், கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் புதிதாக சிறு தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கும் விதமாக முதல்கட்டமாக 10 குடும்பங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் பிளம்பர் ஆகியோருக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில், கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் புதிதாக சிறு தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கும் விதமாக முதல்கட்டமாக 10 குடும்பங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் பிளம்பர் ஆகியோருக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.