தொண்டாமுத்தூர் தொகுதியில் குளத்தை தூர்வாரி மக்களுக்கு பயன் தரும் திட்டத்திற்கு பாஷ் நிதியுதவி!

தொண்டாமுத்தூர் தொகுதியில் சிறுதுளி மற்றும் பாஷ் இணைந்து மாதம்பட்டி பஞ்சாயத்து தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குப்பனூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரினர்.


கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் சிறுதுளி மற்றும் பாஷ் இணைந்து மாதம்பட்டி பஞ்சாயத்து தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குப்பனூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரினர்.

மாதம்பட்டி பஞ்சாயத்து, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட, குப்பனூர் கிராமத்தை, அப்பகுதி மக்கள், குப்பை கொட்டும் இடமாகவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தில் அருகில் உள்ள கழிவுநீரும் விடப்பட்டது. அப்பகுதி மக்களிடம் ஒரு பேச்சுவார்த்தை நடத்திய பின், குளத்தை புதுப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். சிறுதுளி இந்த நீர்நிலையில் பணிபுரிய தேவையான அனுமதிகள் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றார். குளத்தை தூர்வாரி, உள்ளூர் மக்களுக்கு பயன் தரும் திட்டத்திற்கு பாஷ் நிதியுதவி வழங்க முன் வந்தது.

ஊர் குட்டையில் தூர்வாரும் பணியை தொடங்குவதற்கான தொடக்க பூஜை ஜனவரி 5, 2022 அன்று நடைபெற்றது. குளத்தின் நீர்பரப்பு பகுதியில் முட்புதர்கள் மற்றும் புதர்கள் இருந்ததால் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக அகற்ற வேண்டியிருந்தது. தோண்டப்பட்ட மண், கட்டுகளை உருவாக்கவும் பலப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக 3 இன்லெட் கால்வாய்களிலும் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. நீர்நிலையின் சேமிப்புத் திறன் கணிசமாக அதிகரித்து, தூர்வாரப்பட்ட பிறகு குளத்தின் மொத்த அளவு 12756 கன மீட்டராக உள்ளது.



முத்துராஜ் - ஊராட்சித் தலைவர் - மாதம்பட்டி, ஸ்ரீமதி. கவிதா - யூனியன் கவுன்சிலர் - மாதம்பட்டி, ஆர்.எஸ்.கே.கிருஷ்ணசாமி - குழு தலைவர் - சிறு துளியின் நீர்நிலைகள் புத்துணர்ச்சி குழு, உள்ளூர் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஏ ஷாபி, துறைத் தலைவர் - Bosch Global Software Technologies Private Limited, கோவை, கலந்து கொண்டார். குளத்திற்கு கழிவுநீர் செல்வதை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்குளத்தில் சேமிக்கப்படும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை மீட்டெடுக்கவும், விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...