நீதிமன்ற தீர்ப்பின் படி மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்களுக்கு இடம் வழங்கவில்லை என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

இனியும் காலதாமதம் படுத்தினால் மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நெசவாளர்கள் இன்று மனு அளித்தனர்.


திருப்பூர்: நீதிமன்ற தீர்ப்பின் படி மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்களுக்கு இடம் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்கள் 1998-ஆம் ஆண்டு அரசின் பங்களிப்புடன் பணம் செலுத்தி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் 218-பேருக்கு 3-சென்ட் வீதம் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர்.

ஆனால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முறையாக பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்காமல் வேறு நபர்களுக்கு வழங்கி விட்டதாக கைத்தறி நெசவாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையில் மாவட்ட நிர்வாகம் பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் 2019-ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அந்தந்த பகுதியில் பட்டா வழங்க ஏதுவான இடம் குறித்த விவரத்தை கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

மூன்று வருடம் ஆகியும் நீதிமன்ற தீர்ப்பின்படி இதுவரை நிலம் வழங்க வில்லை இது குறித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இன்னும் 210-பேருக்கு பட்டா வழங்க வேண்டிய நிலையில் ஆகஸ்ட் மாதம் மேலும் 14 பேரின் விவரங்களை பட்டா வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பெற்றுக்கொள்ளப்பட்டது.



ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் அதிகாரிகள் தங்களை அலட்சியம் படுத்துவதாகவும், இனியும் காலதாமதம் படுத்தினால் மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் நெசவாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...