'கை கொடுக்கும் காற்று சீசன்': தமிழகத்தின் தினசரி மின் தேவையில் 4,500-மெகாவாட் காற்றாலைகள் பங்களிப்பு..!

காற்று அதிகம் வீசி வரும் காரணத்தால் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி மின் தேவையில் 30% வரை அதாவது 4,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.


கோவை: அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது. காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினசரி மின் தேவையில் 30 சதவீதம் பங்களிப்பு!

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:-



தமிழகத்தில் தினசரி மின் சேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மற்றும் அதற்கு மேல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

தினசரி மின் தேவையில் 30% காற்றாலைகள் பங்களிப்பு செய்து வருகின்றன. அதாவது 4,500 மெகாவாட் மின்சாரம் தினமும் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. ஒரு சில நாட்கள் இந்த பங்களிப்பு சதவீதம் மாறும். எதிர்வரும் மூன்று மாதங்களில் காற்று அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகவே சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...