கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.1,10,000 பறிமுதல் - 6 பேர் கைது!

கேரளா மாநிலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வைத்திருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரளா மாநிலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வைத்திருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே கேரளா எண் கொண்ட காரில் இருந்து தமிழக எண் கொண்ட காருக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஒரு கும்பல் மாற்றி வருவதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கார்களை சோதனையிட்ட போது மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 375 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த பிரமோத், மனோஜ்குமார், கோவையை சேர்ந்த இடைத்தரகர்கள் காஜா மைதீன், குமரேசன், புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் பொள்ளாச்சியை சேர்ந்த மதியழகன், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வரும் கேரளா கும்பல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...