கோவை விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்…!

பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் வனப்பகுதியில் இருந்து மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிக்கு அவ்வப்போது காட்டு யானைகள் இரவு நேரத்தில் கடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கெம்பனூர் பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் வெளியே வந்த 3 காட்டு யானைகள், பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக தெரிகிறது.

இரவு முழுவதும் அதே தோட்டத்தில் இருந்த காட்டுயானைகள், அங்கிருந்து செல்வதற்குள் விடிந்ததால், அதே பகுதியில் உள்ள புதர் அருகே முகாமிட்டது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், போலுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.

இன்று காலையிலும் தொடர்ந்து 3 குட்டி யானைகளுடன் இருந்த 3 பெண் யானைகளும், சென்னனூர் தனியார் தோட்டத்தில் முகாமிட்டு அருகே உள்ள ஆற்றிற்குள் இறங்கி பின் மீண்டும் அதே புதர் பகுதிக்குள் வந்ததால், போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும், யானைகள் மதுக்கரை வனச் சரகத்திற்குள் செல்ல வாய்ப்புள்ளதால், இரவு யானைகள் அங்கிருந்து செல்லலாம் என வனத்துறையினர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் யாரும் யானையின் அருகே செல்லாமலும், யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்கவும், ஆங்காங்கே வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளும் வனத்துறை ஜீப் மூலமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...