பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது!

பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவர், விவசாயம் செய்து வருகிறார். கடந்த மே மாதம் 30ம் தேதி நா.மு.சுங்கம் அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் கோவை ரோடு ஈச்சனாரி அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் திருடுபோன இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (29) மற்றும் சேவகமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், திருடு போன இருசக்கர வாகனத்தை அவர்களிடமிருந்து மீட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...