பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவர், விவசாயம் செய்து வருகிறார். கடந்த மே மாதம் 30ம் தேதி நா.மு.சுங்கம் அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் கோவை ரோடு ஈச்சனாரி அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு சென்ற போலீசார் திருடுபோன இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (29) மற்றும் சேவகமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், திருடு போன இருசக்கர வாகனத்தை அவர்களிடமிருந்து மீட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவர், விவசாயம் செய்து வருகிறார். கடந்த மே மாதம் 30ம் தேதி நா.மு.சுங்கம் அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் கோவை ரோடு ஈச்சனாரி அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு சென்ற போலீசார் திருடுபோன இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (29) மற்றும் சேவகமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், திருடு போன இருசக்கர வாகனத்தை அவர்களிடமிருந்து மீட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.