முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 9447 பேர் எழுதுகின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், யுபிஎஸ்சி தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.
முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 9447 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்விற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, துணை ஆட்சியர் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 24 தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும் துணை வட்டாட்சியர் நிலையில் 40 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 414 வரை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு எழுதுபவர்கள், அந்தந்த தேர்வு மையங்களுக்கு செல்ல உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து போதிய போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், யுபிஎஸ்சி தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.
முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 9447 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்விற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, துணை ஆட்சியர் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 24 தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும் துணை வட்டாட்சியர் நிலையில் 40 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 414 வரை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு எழுதுபவர்கள், அந்தந்த தேர்வு மையங்களுக்கு செல்ல உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து போதிய போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.