பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
திருப்பூர்: பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். அங்கு பஞ்சு கழிவிலிருந்து நூல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென இயந்திரங்களில் இருந்து புகை வந்தது.

அதனை தொடர்ந்து பஞ்சு கழிவுகள் மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியே சென்று பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள், இயந்திரங்கள், பஞ்சு கழிவுகள் கட்டிடங்கள் என அனைத்து பகுதிகளில் தீ மளமளவென பரவியது.

மேலும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் கட்டிடம் இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தது.

தீயணைப்பு துறையினர் 1 மணிநேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். அங்கு பஞ்சு கழிவிலிருந்து நூல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென இயந்திரங்களில் இருந்து புகை வந்தது.
அதனை தொடர்ந்து பஞ்சு கழிவுகள் மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியே சென்று பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள், இயந்திரங்கள், பஞ்சு கழிவுகள் கட்டிடங்கள் என அனைத்து பகுதிகளில் தீ மளமளவென பரவியது.
மேலும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் கட்டிடம் இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
தீயணைப்பு துறையினர் 1 மணிநேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.