பல்லடம் அருகே பனியன் மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.


திருப்பூர்: பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். அங்கு பஞ்சு கழிவிலிருந்து நூல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென இயந்திரங்களில் இருந்து புகை வந்தது.



அதனை தொடர்ந்து பஞ்சு கழிவுகள் மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியே சென்று பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள், இயந்திரங்கள், பஞ்சு கழிவுகள் கட்டிடங்கள் என அனைத்து பகுதிகளில் தீ மளமளவென பரவியது.



மேலும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் கட்டிடம் இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தது.



தீயணைப்பு துறையினர் 1 மணிநேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...