நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு விழா - மேயர் கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்பு!

கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் விக்டோரியா ஹால் வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ உறுதிமொழி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ ஏற்கப்பட்டது.



உக்கடம்‌ பேருந்து நிலையத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மீண்டும்‌ மஞ்சள்‌ பை வழங்கும்‌ பணியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள்‌ பை, மரக்கன்றுகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ முன்னாள்‌ முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞா்‌ மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய.



பின்னர்‌, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்‌.



அதனைத் தொடர்ந்து, விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ உறுதிமொழி ஏற்கப்பட்டது.



அதனைத்‌ தொடர்ந்து, உக்கடம்‌ பேருந்து நிலையத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மீண்டும்‌ மஞ்சள்‌ பை வழங்கும்‌ பணியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள்‌ பை, மரக்கன்றுகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ ஆகியவற்றை வழங்கினார்‌.



தொடர்ந்து, மீண்டும்‌ மஞ்சள்‌ பை பயன்படுத்துவதை வலியுறுத்தி 100 எண்ணிக்கையில்‌ பிளாஸ்டிக்‌ ஒழிப்பு வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டல அலுவலகத்தில்‌ முன்னாள்‌ முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்‌ மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி மேயர்‌, மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களுக்கு இனிப்புகள்‌ வழங்கினார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌, போத்தனூர்‌ பாலம்‌ முதல்‌ வெள்ளலூர்‌ குப்பைக்‌ கிடங்கு வரை சுமார்‌ 2 கிலோ மீட்டர் தூரம்‌ நடைபெற்ற நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா, மண்டல குழுத் தலைவர்கள்‌ வே.கதிர்வேல்‌ (வடக்கு), மீனா லோகு (மத்தியம்‌), சாந்தி முருகன்‌ (பணிகள்‌), வி.பி.முபசீரா (வரி விதிப்பு மற்றும் நிதி), சோமு (௭) சந்தோஷ்‌ (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன்‌ (பொது சுகாதாரம்‌), நிலைக்குழு உறுப்பினர்கள்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ என்று பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...