கோவையில் 1.75 கிலோ தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்..!

கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் சுமார் 1.75-கிலோ மதிப்பிலான சுத்தத் தங்கத்தை வாங்கி தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் 1.75 கிலோ தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி. இவர் கோவை செட்டி வீதியில் அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். மேலும் கோவையில் தங்க நகைக்கடை உரிமையாளர்களிடம் சுத்தத் தங்கமாக வாங்கி நகைகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கோவை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி சுஜித் மைட்டி இடம் 759 1.58 ஜீரோ கிராம் சுத்தத் தங்கத்தை நகைகள் செய்ய கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட நீண்ட நாட்கள் ஆகியும், நகைகள் செய்து கொடுக்காமலும் அவரது செல்போன் எண் உபயோகத்தில் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ் கோவை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவை செட்டி வீதியை சேர்ந்த கனகராஜ் 53 என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடமும் வழக்கமான சுஜித் கடந்த சில மாதங்களாக தங்க நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார். இதனை நம்பி கடந்த 16-ஆம் தேதி இவர் சுஜித் இடம் 420-கிராம் சுத்தத் தங்கத்தை கொடுத்துள்ளார்.

அதேபோல் கனகராஜன் நண்பரே ஐநூத்தி எழுபத்தி எட்டு கிராம் தங்கத்தையும், தங்க நகைகள் செய்ய கொடுத்துள்ளார். ஆனால் தங்கத்தை வாங்கி சென்ற அவர் திரும்ப நகைகளும் கொடுக்காமல் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் சந்தேகமடைந்த கனகராஜ் கோவை பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்து இரண்டு மூன்று தங்க நகை வியாபாரிகளிடம் சுமார் 1.75-கிலோ மதிப்பிலான சுத்தத் தங்கத்தை தங்கத்துடன் மாயமான மேற்குவங்க இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...