கோவையில் பெண் ஐடி ஊழியரை தாக்கி செயின் பறிப்பு - இளைஞர் கைது..!

கத்தியை காட்டி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் பெண் ஐடி ஊழியரை தாக்கி செயின் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகள் திவ்யா (25). சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வரும் திவ்யா, நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கீரணத்தம் - சாராக்குளம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திவ்யா சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த திவ்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதனால் திவ்யா சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப் பிடித்தனர். அவரை சரமாரியாக தாக்கிய கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை நல்லாம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த அரவிந்தன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து கத்தியை காட்டி செயின் பறிக்க முயன்ற அரவிந்தனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...