முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்று இடங்களில் திமுகவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே மற்றும் 4-வது பஸ் ஸ்டாப் அருகே உள்ள பகுதிகளில் திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் Dr.த.பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பால்காரர் தோட்டம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகள், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் நினைவு கூறி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து காஞ்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மூன்று இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொ.மு.ச., மாநில துணை தலைவர், ரத்னவேலு உட்பட தொண்டர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.