கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா: கோவை சேரன்மாநகர் சுற்றுப்பகுதிகளில் தி.மு.க.,வினர் கோலாகல கொண்டாட்டம்..!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்று இடங்களில் திமுகவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.



சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே மற்றும் 4-வது பஸ் ஸ்டாப் அருகே உள்ள பகுதிகளில் திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் Dr.த.பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



பால்காரர் தோட்டம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகள், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் நினைவு கூறி மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து காஞ்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



மூன்று இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொ.மு.ச., மாநில துணை தலைவர், ரத்னவேலு உட்பட தொண்டர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...