கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை..!

வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வீராபாண்டியை சேர்ந்த கேசவமணி (47). என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம், தான் ஒரு அரசு அலுவலர் என்றும், விரைவில் சான்றிதழ்கள் பெற்று தருவதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தொடர் புகார் எழுந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கேசவமணியை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இவர் பொதுமக்களிடம் சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை உடனடியாக வாங்கி தருவதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது: அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் என கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் பொதுமக்கள் கோரும், சாதி, வருமானம், இருப்பிடம், விதவை, சிறு/குறு விவசாயி, வாரிசு, சொத்து மதிப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலம் 15 நாட்களுக்குள் வழங்கப்படுவதால் இடைத்தரகர்கள் நம்பி யாரும் பணத்தை இழக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் இந்த சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் அல்லது குறைபாடுகள் இருந்தால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நேரில் அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...