கோவையில் ஆவின் நிறுவனத்தில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் - முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு..!

கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையில் ஆவின் நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமைமாலை திடீர் சோதனை நடத்தினர்.

வளாகத்தில் உள்ள பொது மேலாளர் அறை, மேலாளர்கள் அறை, அதிகாரிகள் அறை, தயாரிப்புக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நடந்தது.

இந்த சோதனையின் போது, ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை தொழிற்சாலைஉதவியாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக மேஜை அறையில் இருந்து ரூ.2.50 லட்சம் தொகை, அவரது காரில் இருந்து ரூ.5.90 லட்சம் தொகை என மொத்தம் ரூ.8.40 லட்சம் தொகையை போலீசார் கைப்பற்றினர்.

இந்த தொகைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தியால் கைப்பற்றப்பட்ட தொகைக்கு உரிய விளக்கம் தர முடியவில்லை. இதையடுத்து அது ஊழியர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற தொகை என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த தொகையை போலீசார் பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...