மத்திய அரசு நிறுவனங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே நியமிப்பதாகவும், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என கோவையில் சிஐடியு வினர் பி.எப் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
கோவை: தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என சிஐடியு வினர் பி.எப் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்த அலுவலர்களே பெரும்பாலும் பணியில் இருப்பதாகவும், தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை CITU வினர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை ஈடுபட முயன்றனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய CITU மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, ரயில்வே போன்ற அலுவலகங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே மத்திய அரசுபணியில், நியமிப்பதாகவும், இதனால் பொதுமக்கள்தொழிலாளர்கள் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு சேவைகளை பெறுவதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், எனவே மத்திய அரசு தமிழகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களைமுன்னெடுப்போம் என கூறினார்.