கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மர்ம பூச்சி கடித்து 6-வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் கவிஶ்ரீ (6). நீலகிரியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது தேர்வு நிறைவடைந்து பள்ளிகளுக்குவிடுமுறை விட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கோவை காரமடை சின்னபுதூர் பகுதியில் உள்ள குருசாமி தோட்டத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் கவிஶ்ரீ இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த கவிஶ்ரீக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பாட்டி உடனடியாக அவரை காரமடை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் தொடர்ந்து சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து உடனடியாக சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சிறுமியின் கால் மற்றும் மூட்டு பகுதியில் மர்ம பூச்சி கடித்தது தெரியவந்துள்ளது. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்தசிறுமி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் கவிஶ்ரீ (6). நீலகிரியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது தேர்வு நிறைவடைந்து பள்ளிகளுக்குவிடுமுறை விட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கோவை காரமடை சின்னபுதூர் பகுதியில் உள்ள குருசாமி தோட்டத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் கவிஶ்ரீ இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த கவிஶ்ரீக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பாட்டி உடனடியாக அவரை காரமடை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் தொடர்ந்து சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து உடனடியாக சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சிறுமியின் கால் மற்றும் மூட்டு பகுதியில் மர்ம பூச்சி கடித்தது தெரியவந்துள்ளது. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்தசிறுமி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.