அவ்வப்போது வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு சில சமயங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: வனவிலங்குகளால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
கோவையில் வன விலங்குகளால் விளைநிலங்களுக்கு அதிக சேதாரம் ஏற்படுவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே தாங்கள் கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் பல்வேறு விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நிலையில், யானைகள் காட்டுப் பன்றிகள் குரங்கு காட்டெருமை சிறுத்தை போன்ற வனவிலங்குகளால்விளைநிலங்கள் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு சில சமயங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஜூலை 5-ஆம் தேதி கோவையில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழகம் தழுவிய பேரணி நடத்தி காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அடித்துக் கொல்வது என்று முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவையில் வன விலங்குகளால் விளைநிலங்களுக்கு அதிக சேதாரம் ஏற்படுவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே தாங்கள் கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் பல்வேறு விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நிலையில், யானைகள் காட்டுப் பன்றிகள் குரங்கு காட்டெருமை சிறுத்தை போன்ற வனவிலங்குகளால்விளைநிலங்கள் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு சில சமயங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஜூலை 5-ஆம் தேதி கோவையில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழகம் தழுவிய பேரணி நடத்தி காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அடித்துக் கொல்வது என்று முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.