இதில் புகையிலை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், புகையிலையால் ஏற்படும் தீமைகள், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும் முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.
கோவை: உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் தனியார் கல்லூரி (கங்கா நர்சிங்) இணைந்து புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், புகையிலை கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், புகையிலையால் ஏற்படும் தீமைகள், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும் முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.