கோவை, நவம்பர் 15: நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.
இம்மனுவில், நீர்நிலைகள் மற்றும் அதன் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வருங்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அவற்றை கண்காணிப்பது , ஏரி மற்றும் குளங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றை பராமரித்தல், பொதுப்பணி துறைக்கு சரியான நிதியை ஒதுக்குவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயம்புத்தூர் தடுப்பணையை மீட்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் திரு. இரா. மணிகண்டன் தெரிவித்தார்.
மேலும், இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்மனுவில், நீர்நிலைகள் மற்றும் அதன் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வருங்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அவற்றை கண்காணிப்பது , ஏரி மற்றும் குளங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றை பராமரித்தல், பொதுப்பணி துறைக்கு சரியான நிதியை ஒதுக்குவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயம்புத்தூர் தடுப்பணையை மீட்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் திரு. இரா. மணிகண்டன் தெரிவித்தார்.
மேலும், இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.