காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.


Coimbatore: காரமடையை அடுத்த சீளியூர் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜண்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் சுமார் 10 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியிருந்தது.



நேற்று முன்தினம் மாலை தோட்டப்பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ராஜண்ணன், மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்தபோது கிணற்றிலிருந்து விலங்குகள் ஓலமிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, தாய் மற்றும் குட்டி என இரண்டு காட்டுப்பன்றிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர் காரமடை வனத்துறையினருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

காட்டுப்பன்றிகள் தாக்கக்கூடும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வலை விரித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவற்றை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...