நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி, தமிழக ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15: நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.

இம்மனுவில், நீர்நிலைகள் மற்றும் அதன் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வருங்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அவற்றை கண்காணிப்பது , ஏரி மற்றும் குளங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றை பராமரித்தல், பொதுப்பணி துறைக்கு சரியான நிதியை ஒதுக்குவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயம்புத்தூர் தடுப்பணையை மீட்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் திரு. இரா. மணிகண்டன் தெரிவித்தார்.

மேலும், இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...