கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வேன் டிரைவரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.