கைத்தறி நெசவாளர்களுக்கென மகாத் காந்தி புங்கர் பீமா யோஜனா எனும் காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.
சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.
அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.
சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.