தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்திருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மக்கள் சக்தியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையான SIIR பணியின் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் பரவல், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு எதிரான செயல்கள், கோவில் இடிப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் இந்து முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.

அதேபோல், பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.விற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...