கைத்தறி நெசவாளர்கள் புதிய நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தறி நெசவாளர்களுக்கென மகாத் காந்தி புங்கர் பீமா யோஜனா எனும் காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.

சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...