பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Coimbatore: பவானி தடுப்பணையில் மேற்கொள்ளப்படும் ஆண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்படும் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தினால் கதவணை மற்றும் எந்திரங்களின் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (7-5-2026) முதல் 10-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பில்லூர்-3 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறும், அவசியமற்ற நீர் விரயத்தை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, குடிநீர் விநியோகம் வழக்கம்போல் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...