வருமான வரித்துறை அதிகாரி மாயம் - 5 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரம்


கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார் மாயமானதாக குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கோவை வருமான வரித்துரை துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவரது தந்தை செண்பக ராமன் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 38 வயதான சிவக்குமாருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் கோவை பீளமேடு அருகேயுள்ள கவுதமபுரி நகர் பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் இருந்து சிறு சூட்கேசுடன் வெளியேறியுள்ளார். அதன்பின்னர் சிவக்குமார் வீடு திரும்பாத நிலையில், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என பீளமேடு காவல்நிலையத்தில் அவரது சகோதரர் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடும் பணியில் 5 தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

காவல்துறையினர் நடத்தி விசாரணையில் சிவக்குமார் தனது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே வைத்து சென்றிருப்பதும், இரவு நேரத்தில் நேர்த்தியாக உடையணிந்து அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றது, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வெளியேறினாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை துணை ஆணையர் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...